> குருத்து: தில்லை தீட்சிதர்களின் லீலைகள் – ஒரு புகார் மனு!

February 6, 2009

தில்லை தீட்சிதர்களின் லீலைகள் – ஒரு புகார் மனு!


தில்லை தீட்சிதர்கள் காஞ்சி சங்கராச்சாரியார் செய்த லீலைகளுக்கு சற்றும் சளைக்காதவர்கள். கோவில் வருவாயில் தின்று கொழுத்து, அவர்கள் சிதம்பரம் கோவிலுக்குள் செய்த அட்டூழியங்களை நாத்திகர்களாகிய ம.க.இ.க காரர்கள் சொன்னால் சந்தேக கண் கொண்டு பார்க்கிறார்கள்.

இதோ சிதம்பரத்தில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் இளங்கோ, தமிழக முதலமைச்சர், உள்துறை செயலர் ஆகியோருக்கு விரிவான புகார் ஒன்றை கடந்த ஆண்டு அளித்துள்ளார். படியுங்கள்.

இந்த புகார் உட்பட பல்வேறு ஆதாரங்கள் அடிப்படையிலேயே தீட்சிதர்களுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இனி அவர் அளித்த புகார் மனுவை அவரது சொற்களிலேயே தந்துள்ளேன்:

சிதம்பரம் நடாஜர் கோயில் தீட்சிதர்கள் யாருக்கும் அந்த சமூகத்திற்குச் சொந்தமல்ல என்று 100 ஆண்டுகளுக்கு முன் சென்னை உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் பெஞ்ச் தீர்ப்பளித்திருக்கிறது. இருந்தாலும் பெரிய கோயிலை, தீட்சிதர்கள் தங்கள் சமூகத்திற்குச் சொந்தமான சொத்துபோல்
தீட்சிதர்கள் கோயிலின் 4 கோபுர வாயிற் கதவுகளையும் பிறகு 2-வது உட்பிரகார கதவுகளையும் இரவில் மூடிக்கொண்டு, கோயில் வெளிப்பிரகாரத்திலும் உட்பிரகாரத்திற்குள்ளும் சுமார் 10 தீட்சிதர்கள் அடங்கிய கும்பல்கள், கள்ள சாராயம், அயல்நாட்டு மதுபானங்கள் சகலத்தையும் குடிப்பதும், பரோட்டா, சிக்கன், மட்டன், ஆம்லட், அவிச்ச முட்டை சகலமும் சாப்பிட்டு விட்டு, வெற்றிலை, பீடி, சிகரெட், பான்பராக் போட்டுக்கொண்டு, பெண்களுடன் உறவு கொண்டு, சொர்க பூமியாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

திடுக்கிடும் 2 அல்லது 3 கொலைகளையும் நடத்தி, அதை குடித்துவிட்டு இறந்து விட்டார்கள் என்று மறைத்துவிட்டார்கள். அந்த ரௌடி தீட்சிதர்களும் நல்ல பணக்காரர்கள். சாமி பைத்தியம் பிடித்தவர்களிடம் குளத்தை தூர் வார வேண்டும். திருப்பணி செய்ய வேண்டும் என்று பணத்தைக் கணிசமாக வசூல் செய்து, ஆளுக்கு ஒரு செல்போன் வைத்துக்கொண்டு, எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், தங்களுக்கு முதலமைச்சரும் சில அமைச்சர்களும் வேண்டியவர்கள் என்று சொலலிக்கொண்டு, போலீசைப் பயமுறுத்துகிறார்கள்.
நடராஜர் கோயிலுக்குள் பஞ்சமா பாதகம் செய்து, போலீஸ் மற்றும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துக் கொண்டிருக்கும் முக்கிய தீட்சிதர்கள் பெயர்கள்: (1) தில்லை தீட்சிதர் த.பெ.
கீர்த்திவாசக தீட்சிதர், சபாநாயகர் கோயில் தெரு (2) ராஜா தீட்சிதர் த.பெ. குப்புசாமி தீட்சிதர், கீழரத வீதி (3) பட்டு தீட்சிதர் த.பெ. கோபால் தீட்சிசதர், வடக்கு சந்நதி (4) கனகு தீட்சிதர் த.பெ. வைத்திநாத தீட்சிதர், கீழ வீதி, (5) குப்புசாமி தீட்சிதர் த.பெ. சிச்சுவடி மணி தீட்சிதர், கீழரத வீதி (6) முருக தீட்சிதர், (7) அமர்நாத் தீட்சிதர், கீழ வீதி முதலாவோர்.

சிதம்பரம் டவுன் கீழ ரத வீதியில் உள்ள வேம்பு தீட்சிதர் மகன் மூர்த்தி தீட்சிதரை சுமார் ஒரு வருடத்திற்கு முன் நடராஜர் கோயில் உள் பிரகாரத்திற்குள் கருங்கல் தூண் அல்லது சுவற்றில் மோதி, தீட்சிதர்கள் கொன்றுவிட்டார்கள். மேல கோபுர வாசல் வழியாக கோயில் முதல் பிரகாரத்திலிருந்து, கற்பகிரகம் உள்ள உள் பிரகாரத்திற்குள் செல்லும் மேல் புறமுள்ள கதவு, காலை 6.3.4 மணியாகியும் ஒரு நாள் திறக்காமல், கோயிலுக்குள் பக்தர்கள் போக முடியாமல் திணறிக்கொண்டு இருந்தார்கள்.

அப்பொழுது ப.சிதம்பரம் கட்சியைச் சேர்ந்த திரு. நாகராஜன், இன்னும் சிலர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொழுது, கீழ சந்நதி வழியாக ஒரு ஆட்டோ வந்தது. மேல்புறம் கோயில் கதவு திறக்கப்பட்டு, மேலே கண்ட தீட்சதர்கள் மூர்த்தி தீட்சிதரை ரத்தம் ஒழுக ஒழுக துக்கி வந்ததைப் பார்த்து, கொலை நடத்திருக்கும் என்று சந்தேகப்பட்டு, ராஜ்குமார் மேலரத வீதி போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் புகார் செய்திருக்கிறார்.

போலீஸ் கொலை கேசு என்று தெரிந்ததும், உடனே வராமல் ராஜ்குமாருடன் வாதம் செய்து, டி.எஸ்.பி.க்குப் புகார் செய்வேன் என்று தெரிவித்த பிறகு வேண்டாவெறுப்புடன் போலீசுடன் குற்றம் நடந்த இடத்திற்குப் போனபோது, ஆட்டோ டிரைவரை விசாரித்தால் யார் அவரை அழைத்து வந்த தீட்சிதர் என்பதும் மற்றும் என்ன நடந்தது என்பதும் தெரியும்.

ஆனால், ராஜ்குமார் போலீசிடம் சொல்லி, புலன் விசாரணை செய்ய சொல்லிவிட்டுப் போய்விட்டார். பிணத்தை வேம்பு தீட்சிதர் வீட்டில் போட்டுவிட்டு, குற்றம் செய்தவர்கள்
போய்விட்டார்கள். பணத்தை வசூல் செய்து, பங்கு பிரித்துக் கொள்வதில் மூர்த்தி தீட்சிதர் சரியாக கணக்கு வரவு செலவு காட்டாமல் ரூ.50000-க்கு மேல் மறைத்துவிட்டதாக தகராறு செய்ததால் மற்ற தீட்சிதர்கள் கல் தூணில் மோதி கொன்றுவிட்டதாகத் தகவல். மூர்த்தி தீட்சிதருக்கு கே.அடுரிலிருந்துதான் ஒரு ஆதிதிராவிடர் கள்ளச் சாராயம் கொண்டு வந்து கொடுத்து, அதை சொம்பில் ஊற்றி வைத்துக்கொண்டு, நடராஜப் பெருமாள் உள்ள பொற்சபையிலேயே வைத்துக்கொண்டு, தீர்த்தம் சாப்பிடுவது வழக்கமாம்.

கே.ஆடூரில் மளிகைக் கடை வைத்திருந்த செல்வராஜ் மனைவியை சிதம்பரம் கோயிலுக்கு அழைத்துவந்து அனுபவிப்பதில் தகராறு ஏற்பட்டு, செல்வராஜை சிதம்பரத்தில் கொன்று, ஆட்டோவில் ஊருக்குக் கொண்டு போனார்கள். இறந்து போன செல்வராஜ் மனைவி சிதம்பரத்தில் தான் இருக்கிறார். அவள் பெயர் ராஜகுமாரி.

போலீஸ், டிபூடி கலெக்டருக்குச் சொல்லி, பினத்தைப் பரிசோதனை செய்திருக்க வேண்டும். சந்தேகப்பட்ட கொலை வழக்கு என்று பதிவு செய்து, சம்பந்தப்பட்ட தீட்சதர்களை விசாரித்திருந்தால் உண்மை தெரியும். இறந்துபோன மூர்த்தி தீட்சிதர் குடித்துவிட்டு குடும்பத்தில் தொல்லை கொடுத்து வந்ததால் கொலை கேசு புகார் செய்ய பயந்து, போஸ்மார்டம் பண்ணுவதைத் பெரிய தீட்சிதர்கள் முயன்று கொலை குற்றத்தை மறைக்க முயன்றிருக்கலாம்.

ஆனால், கோயில் பொது இடம், புனிதமான இடம். பக்தர்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய இடம். அதற்குள் கொலை நடக்க போலீஸ் அனுமதிக்கக்கூடாது. மூர்த்தி கொலை நடந்த இரவுக்கு முன்னாள் மாலை, காலம் சென்ற மக்கள் தலைவர். ஜி.கே.மூப்பனாருக்கு, அம்மன் கோயிலில் உள்ள சித்திரகுப்தருக்கு, இ.காங்கிரஸ் நிர்வாகிகள் திரு. நாகராஜன், திரு.ராஜன் போன்றவர்கள் இறந்துபோன மூர்த்தியை வைத்துதான் விசேஷ பூஜை செய்திருக்கிறார்கள். எனவே, சிதம்பரம் டவுன் போலீஸ் இதற்குமுன் கோயிலில் நடந்த ராயர் கொலையையும் புலன் விசாரிக்காமல் விட்டுவிட்டதால், நடராஜர் கோயிலின் புனிதத்தையும் அங்கு வருகிற வயதானவர்கள் மற்றும் பக்தர்கள் உயிர் உடமைகளைக் காப்பாற்றவும் முதலமைச்சர் சி.பி.சி.ஐ.டி. மூலம் விசாரனை நடத்தி உண்மைக் குற்றவாளிகளைக் கோர்டில் நிறுத்த அரசு உத்தரவிட வேண்டும்.

மூர்த்தி கொலைக்கு முன் வீட்டு புரோக்கர் ராயர் என்ற ஒரு ஏழை சில தீட்சிதர்களால் 1/4 பிராந்தி பாட்டிலை கீழவீதியிலுள்ள ஆட்டோ ரிக்ஷாக்காரர்களில் ஒருவர் பிடுங்கிக் கொண்டதால் அவர் அன்று டவுன் போலீஸ் சர்க்கிளாக இருந்த இப்ராகிம் ராவுத்தரிடம் பிடிபட்டு, தீட்தர்கள் தான் பிராந்தி பாட்டில், பரோட்டா, சிக்கன் எல்லாம் வாங்கிவரச் சொன்னார்கள் என்று கீழகோபுர வாசலில் தீட்சதர்களைக் காட்டிக் கொடுத்தாலும் ராயரை உதைத்து கொன்று, கோபுர வாசலுக்குள் போட்டுவிட்டார்கள் என்று தகவல்.

கீழ கோபுர வாசலில் பிராந்தி, பாட்டில், பரோட்டா, சிக்கன் பொட்டலத்துடன் வந்தவரைப் பிடித்த டவுன் போலீஸ் ஏன் அதில் சம்பந்தப்பட்ட தீட்சிதர்கள் மீது வழக்குத் தொடரவில்லை? அல்லது ராயர் இறந்த பிறகாவது சந்தேகப்படவில்லை? சந்தேகப் பட்ட கொலை என்ற ராயர் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பவில்லை என்பது முக்கியமாக கவினிக்க வேண்டிய விஷயம்.

இதுவும் பொதுஇடம். புனிதமான இடம். கோயிலுக்குள் நடந்த கொலை. கடந்து 1 வருடத்தில் கோயிலுக்குள் இரண்டு பெண்கள் மர்மமான முறையில் இறந்திருக்கின்றனர்.

ராயர் கொலை நடந்த இரவு பல்லாக்கு திருவிழா. மூர்த்தி கொலை, ராயர் கொலைக்கு முன் ஒருவர் கோயிலுக்குள் வந்து, அம்மன் கோயிலில் குடித்துவிட்டு தூங்கும் ஒருவரை தீட்சிதர்கள் பங்கு மாமுல் கேட்டு, கொடுக்காததால், சிவகங்கை குளத்திற்கு அருகில் கொன்றுவிட்டதாக ஒரு தகவல். சிதம்பரம் டவுனில் தீட்சிதர்கள் மீது புகார் கொடுக்கவே பயப்படுகிறார்கள் என்று எனக்கு கிடைத்த தகவல்களை முதலமைச்சருக்கும் உள்துறை செயலாளருக்கும் உரிய நடவடிக்கைக்கு அனுப்புகிறேன்.

மதிப்புக்குரிய குமாஸ்தாக்கள் சங்கத் தலைவர் திரு.ராஜ்குமார், காங்கிரஸ் தலைவர் திரு. நாகராஜ், திரு.ராஜு முதலியவர்களை விசாரித்தால் விளக்கமாகச் சொல்வார்கள்.

தயவுசெய்து தீட்சிதர்கள் தாட்சண்யத்திற்காகவோ, தீட்சதர்கள் மீது வழக்குப் போட்டால் தெய்வ குற்றம் ஏற்படும் என்று பயந்தோ, வழக்கு சி.பி.சி.ஐ.டி.மூலம் விசாரிக்காமல் விட்டால் மனித உரிமை மீறல் குற்றத்திற்காக மனித உரிமைக் கமிஷனுக்குப் புகார் செய்ய வேண்டிவரும்.

வேலுர் ஜலகண்டேஸ்வரர் கோயிலை அரசு எடுக்க எவ்வளவு காரணங்கள் உண்டோ, அதைவிட 1000 காரணங்கள் இருக்கின்றன. சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு நிர்வாக அதிகாரியை நியமிக்க கொள்ளையர்கள், கொலைக்காரார்கள், ஆணவக்காரர்கள், சர்வாதிகாரிகள் கடாராமாக விளங்கும் கோயிலை, மனித உரிமைகளும், இந்திய அரசியல் சாசனம் தந்த அடிப்படை உரிமைகளையும் மதிக்காமல் மிதிக்கும் சில தீட்சிதர்கள் பிடியில் இருந்து மீட்டு, அவர்கள் மீது சி.பி.சி.ஐ.டி.மூலம் விசாரணைக்கு உத்தரவிட வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் புகாரில் கூறியுள்ளார்

நன்றி – லைட்ங்க் (lightink)

http://lightink.wordpress.com

8 பின்னூட்டங்கள்:

Anonymous said...

Hi! what is this? Too much. really, Dikshidars'are sankarachariyar's brothers.

Anonymous said...

Aiyoo! ivvalava?!

Anonymous said...

நடராஜரை காணவேண்டும் என்ற அளவற்ற ஆவலில் தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்த நந்தன் சிதம்பரம் கோயிலில் நுழைந்த போது உயிரோடு எரித்து 'சொர்க்கத்திற்கு' அன்றைய அனுப்பியவர்கள் தீட்சிதர்கள்.

பார்ப்பனிய ஆதிக்கம் இறுக்கமாக இருக்கும் சிதம்பரம் கோயில் வாசல் நீதியின் முன் திறக்கப்பட வேண்டிய அவசியம் பல நூறு ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.

- திரு

Anonymous said...

உழைக்காமல் வாழுகிற கும்பல்கள் எப்பொழுதுமே மைனர் வேலைகளும், மாமா வேலைகள் தான் செய்யும்.
அரசு கோவிலை கைப்பற்றியதன் மூலம், நடராசர் தீட்சிதர்களிடமிருந்து காப்பாற்றப்பட்டிருக்கிறார் என புரிந்து கொள்கிறேன்.

Dr.Rudhran said...

much more has happened...but whatever we say idiots still talk of purity of impunity

Anonymous said...

Sankaraachariyaar is a fraud then you will be fraud...

Brothers???

Black dots of Hindhu...

Anonymous said...

Dikshidars are not paappans.. they are equivalent to namboodhriris of kerala...and they are a seperate sect of saivites even they dress like paappaans.. they dont mingle with usual Iyers or Iyengars and dont marry or get married to them too.. this is like a seperate clan...

Anonymous said...

அபச்சாரம் அபச்சாரம்

எங்களேயே திட்டுறேளா! இருங்கொ மாப்புள சீபீஎம் மூசாவ அனுப்புறேன் ,அதுக்கும் மசியலேன்னா போலிவிடுதல,சந்திப்பு ரமேசு பாபு எல்லாம் நாங்க எத குடிக்க சொன்னாலும் குடிப்பாங்க எத திங்க சொன்னாலும் தின்னுவாங்க. அவங்க உங்க தளத்துக்கு வந்து சங்கராச்சாரி வாய்மாதிரியே ஆக்கபோறாளா இல்லையான்னு மட்டும் பாருங்கோ

தில்லை வாழ் அந்தணர் சங்கம்
சீபீஎம் ஆபீஸ் பின்புறம்
கைலாயம் (தில்லை)